வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மகள் படுகாயம்
Monday, March 28th, 2016
இளவாலை பெரியவிளான் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை( 27-03-2016) மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த திரவியம் அகிலேஸ்வரன் (வயது -36) என்பவரே உயிரிழந்தவராவார்.அவரது மகளான அ .அகிலா (வயது -14) என்ற சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
நெஞ்சுவலியால் துடித்த மகளை மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றபோதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு - தேர்தல்கள் ஆண...
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை -சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ...
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று - யாழ்பாணத்தில் நினைவுகூரல்!
|
|
|


