அமைச்சர் டக்ளஸஸின் எண்ணக் கரு – வடக்கின் நவீன சுற்றுலா மையமாகின்றது நெடுந்தீவு!

Friday, March 29th, 2024

தீவக பிரதேசத்தை குறிப்பாக நெடுந்தீவு பிரதேசத்தை இலங்கையின் சிறந்த சுற்றுலா மையமாக உருவாக்க வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கரு தற்போது நடைமுறைசாத்தியமாகவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டவரைபின் பிரகாரம் (UDA ) தீவகப் பிரதேசங்களை குறிப்பாக நெடுந்தீவை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் தற்போது துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஓர் அங்கமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கான திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்றது. 

குறித்த கலந்துரையாடலில் யாழ்மாவட்ட பதில் அரச அதிபர், மேலதிக அரச அதிபர், நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அணுகுமுறைகளே எமக்கான உரிமையையும் தீர்வுகளையும் வென்றெடுத்து தரும் - கட்சியின் தோழர்கள் மத்தியில் செ...
வடக்கில் பாரிய அபிவிருத்தி - ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் – அமை...

மக்கள் நலன்சார்ந்து சிந்திக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக இருப்பது சிறப்பானது ...
தனியார் நிறுவனம் சட்ட விரோத காணி அபகரிப்பு - தடுத்து நிறுத்துமாறு முல்லைத்தீவு தியோநகர் மக்கள் அமைச்...
கல்விக்கனவை வென்றெடுத்த நீங்கள் வாழ்வின் கனவையும்வெல்வீர்கள் - டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!