உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் ரின் மீன்களின் தர நிலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்!

Wednesday, March 20th, 2024

உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் ரின் மீன்களின் தர நிலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்..

இதனடிப்படையில் உள்ளூர் ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சிரான் பெர்னாண்டோ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த இக்கலந்துரையாடலின்போது ரின் மீன்களில் உள்ளடக்கப்படும் மீன் துண்டுகளின் நிறையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் விற்பனை விலைக்குறைப்புச் செய்வதற்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டடதுடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மர்ஹூம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானாவின் நாமத்தை கொழும்பில் ஒரு வீதிக்கு சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...
இரயில் பயணிகள் மீதான கல்லெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு -  டக்ளஸ் தேவா...
“எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ள முடிவுசெய்தது ஏன்? “எழுக தமிழ்” கூட்டுப்பேரணியாக அணிதிரண்டது ஏன்...