கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Tuesday, March 5th, 2024
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள மூன்று பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் அறிவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் விருப்பத்திற்கேற்ப திறமைகளை வெளிப்படுத்தும் பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளைப் பெறுவதற்குத் தேவையான பின்னணி தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
35 வயதுக்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த தடை!
இலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய!
கடந்த 2 ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்துள்ளது – எச்சரிக்கை விடுத்துள்ளது அரச ...
|
|
|


