ஊடகவிலாளர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்களை பகிரங்கப்படுத்தும் திட்டத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி ஆதரவு !
Tuesday, February 27th, 2024
ஊடகவிலாளர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்களை பகிரங்கப்படுத்தும் திட்டத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி அன்ரீஸ் இமனுவல் ஆதரவு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகத்துறையானது பொதுத்துறை எனவும், அது அரசியலைப் போன்றது எனவும் மெக்சிகோ ஜனாதிபதி அன்ரீஸ் இமனுவல் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே சகலரும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை உலக நாடுகளில் ஊடகவிலாளர்களுக்கு அச்சுறுத்தல் நிறைந்த நாடாக மெக்சிகோ காணப்படும் நிலையில் ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசி எண்ணை பகிரங்கப்படுத்துவது மேலும் ஆபத்தானது என விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா!
தேவாலயத்தில் கைக்குண்டு எடுக்கப்பட்ட விவகாரம் - உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்ற...
எமக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை - ராகுல் காந்தியின் நினைவு தினத்தில் உருக்கம்!
|
|
|


