எட்கா ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம்!

Tuesday, February 20th, 2024

எட்கா எனப்படும் உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார்.

இதன்படி, இந்த ஒப்பந்தம் தொடர்பான 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தையை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்றது.

அதில் பங்கேற்காத முரண்பாட்டு தீர்ப்பு மற்றும் இறுதி ஏற்பாடுகள் தொடர்பான துணைக்குழு, புதுடெல்லியில் அடுத்த சில நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பகிடிவதை விவகாரம்: பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு யாராவது செய்திருக்கலாம் - யாழ். பல்கல...
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியி...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலா? – தென்னிலங்கை அரசியல் களத்தில் பரபரப்பு!

இரண்டு வாரங்களுக்குள் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் - பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள...
மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம் - அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தல...
பாடப்புத்தகங்கள் அச்சிடல் செலவு கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகம் - கல்வி அமைச்சர் சுசில் பிரே...