பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் – 10 பேர் உயிரிழப்பு!.
Tuesday, February 6th, 2024
பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைபர்-பக்துன்க்வா மாகாணம், டிராபன் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடத்தியும், பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
போயஸ் கார்டனில் தேடுதல் - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முடக்கம்!
பெரும்போக அறுவடை நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் இராணுவம் வெளியேறிய காணிகளை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை - மாவட்ட அரச அதிபர் தெரிவி...
|
|
|


