சர்ச்சைக்குரிய உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை குறித்து கலந்துரையாடல்!
Sunday, September 11th, 2016
உடுவில் மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள அதிபர் மாற்றம் தொடர்பான பிரச்சினை குறித்து, பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கிடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும், மாணவிகளின் கல்வி செயற்பாடுகளை அமைதியான முறையில் தொடர்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இக்கலந்துரையாடலில் உடுவில் மகளிர் கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையில் கல்வி கற்கும் மாணவிகளது பெற்றோர்களை கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

Related posts:
புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி!
மனித உடலில் உணரப்படக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எ...
இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக இலங்கைக்கு விமானம் ஒன்றை வழங்க அவுஸ்தி...
|
|
|


