மண்டைதீவு பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது!
Thursday, January 11th, 2024
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவகப் பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார், கடற்படை, இராணுவம் என்பன கூட்டாக இணைந்து மண்டைதீவு பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கழிவு இல்லாத கடற்கரைகளாக மாற்ற நடவடிக்கை !
ஜி-20 சர்வமத மாநாடு இன்று ஆரம்பம் - சிறப்புரை ஆற்றுகிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
பூரண தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் 30 க்கு பின்னர் அமுல் - சுகாதார சேவைகள் பணி...
|
|
|


