மாலைத்தீவுக்கு அருகில் இன்றுகாலை நான்கு நில அதிர்வுகள் பதிவு – புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தகவல்!

Friday, December 29th, 2023

இந்தியப் பெருங்கடலின் மாலைத்தீவுக்கு அருகில் இன்று காலை நான்கு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடீயுட்டாக முதலாவது நில அதிர்வும், 5.8 மெக்னிடீயூட்டாக இரண்டாவது நில அதிர்வும் பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 5.0 மெக்னிடியூட் அளவிலான மேலும் இரண்டு நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதுடன், இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது

000

Related posts:


ஜனாதிபதி கோட்டபயவின் தலைமையின் கீழ் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை சிறப்பாக செயற்பட்டுள்ளது...
தேர்தல் வாக்களிப்பு பொறிமுறையில் மாற்றம் - ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவிப்பு!
தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள் – யாழ்மாவட்ட கடற்றொழிலாளர்களிடம் கட்டளைத் தளபதி கோ...