டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்ப – யாழ். போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைப்பு!
Sunday, December 24th, 2023
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பாக ஆண் பெண் மருத்துவ விடுதிகளில் நோயாளர்கள் படுக்கைகள் இன்றி பெரும் சிரமப்படுகிறார்கள் .இந்த நிலைமையை சமாளிப்பதற்காக மேலும் இரு தற்காலிக மருத்துவ விடுதிகள் இன்று திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று கிராமக்கோட்டடி வீதி மக்கள் பாவனைக்காகத் திறப்பு!
கடந்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை- ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
அனைவரும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் - சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி கோரிக்கை!
|
|
|


