நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Friday, December 22nd, 2023

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஊடகவியலாளர் நடேசனின் படுகொலைவிசாரணைஆரம்பிக்கப்படாததைக் கண்டித்துமட்டக்களப்பில் கவனயீர்ப்புப்போராட்டம...
தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்தின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்வது இடம்!
உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் வந்தால் எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் – ...