அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுநிலைகளை ஆராய அமைச்சர் டக்ளஸ் இரணைமடு குளத்திற்கும் விஜயம்!
Wednesday, December 20th, 2023
கிளிநொச்சி பகுதிக்கு இன்றையதினம்(20) விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு குளத்திற்கும் விஜயம் செய்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்தும் நீரினை வெளியேற்றும் வகையில் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுவான நிலையினை ஆராயும் நோக்கோடு இரணைமடுவிற்கு களவிஜயம் செய்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதோடு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளோடு கலந்துரையாடலினையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பயிற்சிக்காக விறகுக் கட்டையை கூட தூக்காதவர்கள் மாணவர்களை பலிகொடுத்தே வீரம் பேசுகின்றனர். - நாடாளுமன...
கிளிநொச்சி சட்டவிரோத மணலை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!
வெடுக்கு நாறியில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அடவடித்தனமே - அமைச்சர் டக்ளஸ் சுடிக்காட்டு!
|
|
|
உள்ளூராட்சி தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன் படுத்தினால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும் ...
35 அடிக்கு மேற்பட்ட நீளமான மீன்பிடி படகுகளுக்கு அரச மானியம் வழங்க நடவடிக்கை - டக்ளஸ் தேவானந்தா ஏற்பா...
மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது - டக்ள...


