இந்திய உதவியால் இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டது – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவிப்பு!
Tuesday, December 19th, 2023
இந்தியாவின் உதவியால், இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – இந்திய தேசம் ஒரு பிராந்திய தலைமை தேசமாக மாத்திரமல்ல, அதன் அண்டை நாடுகளுக்கு, குறிப்பாக இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடியின் போது ஒரு முக்கியமான உயிர்நாடியாக செயற்பட்டது.
இந்தநிலையில் இலங்கைக்கான இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை அவர் எடுத்துரைத்துள்ளார்.
உலகின் பிற நாடுகள் என்ன செய்வது என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது உண்மையில் இந்தியாவே இலங்கைக்கு உதவி செய்தது. இந்த வேகமும் நம்பகத்தன்மையும் இந்தியாவை நம்பகமான பிராந்திய நட்பு நாடாக சித்தரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்
Related posts:
சுகாதார சேவைகள் சீர்குலைவதை தவிர்க்க யோசனைகள் முன்வைத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !
நாட்டில் 11 ஆயிரத்து 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 23 பேர் மரணம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
இளைஞர் யுவதிகளுக்கு 70, 000 ஆடுகளை இலவசமாக வழங்குகிறது விவசாய அமைச்சு!
|
|
|


