சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம்?

Saturday, March 5th, 2016

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாகவும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் ஏனைய வருடங்களைப் போலவே இந்த வருடமும் மார்ச் மாதம் இறுதியில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


வினைத்திறனற்ற வடக்கு மாகாண சபையின் பயனற்ற மருதம் மரங்களின் மாதிரி பூங்கா – பல  இலட்சம் ரூபா வீண் விர...
பயணிகள், பண்டங்களுக்கு பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் - அதி விசேட வர்த்தமானி மூலம்...
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!