நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட நடவடிக்கை – அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தவும் திட்டம்!.

Friday, December 15th, 2023

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸ் திணைக்களமும் அடிபணியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 6 மாதங்களில் நாட்டில் குற்றச்செயல்களை குறைப்பதற்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்  இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


உள்ளூராட்சி சபைத் தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு சவாலான தேர்தல் அல்ல - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...
எத்தகைய தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை - கல்வி அமைச்சர் சுசில் அறி...
பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் குறைபாடுகள் இருந்தால் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை...