சில தூதுவர்கள் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களின் அதிகாரத்திற்கும் மேலாக செயற்படுகின்றனர் – வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குற்றச்சாட்டு!
Friday, December 8th, 2023
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தூதுவர்கள் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களின் அதிகாரத்திற்கும் மேலாக செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு தொடர்பான பாதீட்டின் குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிலர் நாட்டின் செயற்பாடுகளுக்கு தமது பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர். எனினும், சிலர் மத்தியில் எமது தேவை தொடர்பில், தெளிவின்மை காணப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தூதரக சேவையினை எவ்வாறு வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
விமான நிலையத்தில் பாரிய மோசடி!
நாடு முழுவதும் மின்சார துண்டிப்பு விவகாரம்: மின்சார சபை கட்டுப்பாட்டு மையத்திற்கு கண்கானிப்பு விஜயம்...
தேசிய வேதன ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு - ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அ...
|
|
|


