வேலைகளை குறைக்க ஜிம்பாப்வே நடவடிக்கை!
Saturday, September 10th, 2016
அரசின் செலவினங்களை குறைப்பதற்காக 25 ஆயிரம் வேலைவாய்ப்புகளை குறைக்க திட்டமிடுவதாக ஜிம்பாப்வே அறிவித்திருக்கிறது.
ஊதியம் குறைப்பு, ஊக்கத்தொகை இடைநீக்கம், வெளிநாடுகளில் குறைவான தூதரகங்களையும் துணை தூதரங்களையும் கொள்வது ஆகியவையும் இந்த நடவடிக்கையில் அடங்குவதாக நிதி அமைச்சர் பேட்ரிக் சினமாசா கூறியிருக்கிறார்.
இந்த நடவடிக்கைகளை நகைச்சுவைகள் என்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சி, ஊதியம் வழங்க அரசிடம் பணமில்லை என்பதை ஏற்றுகொள்வதை இந்த திட்டங்கள் காட்டுவதாக கூறியுள்ளது.

Related posts:
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்புகள்!
அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா : ஒரே நாளில் 2,349 பேர் பலி..!
டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் மனம் திறந்த புடின்!
|
|
|


