நாட்டில் நிலவும் அதிகரித்த வெப்ப நிலையால் தேயிலை செய்கையில் வீழ்ச்சி!
Monday, March 28th, 2016
தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் தேயிலை செய்கையில் நூற்றுக்கு 50 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சங்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர் லால் பிரேமநாத் குறிப்பிட்டார்.
சில தேயிலை தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை எதிர்பார்ப்பதாகவும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெருமளவு அந்திய செலாவணியை ஈட்டுவதற்கு பங்களிப்பு செய்யும் தேயிலை தோட்ட செய்கையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Related posts:
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பப் பிரிவு
குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு..!!
வலது கையைத் துண்டாடிய 4 பேருக்கு ஒத்திவைத்த சிறை ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கவும் யாழ்ப்பாண மேல்நீதி...
|
|
|
சீரற்ற காலநிலை - யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த மு...
அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானி இரத்து - ஜனாதிபதியால் வெளியிடப...
நாளை (26) முதல் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் - ...


