எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் – கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
Saturday, November 18th, 2023
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகளும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.
எனினும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அதேவேளை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாக அஜித் குணசேகர மேலும் தெரிவித்தார்.
அதேவேளை நாட்டில் விற்பனையாகும் முட்டைகளுக்கான நிர்ணய விலை சில வியாபாரிகளால் கடைப்பிடிக்கப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சமூக ஊடகங்களுக்கான வலவான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரி...
திறைசேரியால் யதார்த்தமற்ற முறையில் அதிக வருவாய் மதிப்பீடுகள் நாடாளுமன்றுக்கு காட்டப்பட்டுள்ளன – மத்த...
யாழ். பண்ணை வீதி விபத்து - பலியான அப்பாவி இளம் உயிர் - பொறுப்புக்கூற வேண்டியது யார்? - தனியார் கல்வி...
|
|
|


