ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கரு – டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒக்டோபர் 11 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்க தொழில்நுட்ப அமைச்சு தீர்மானம்!
Saturday, October 7th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒக்டோபர் 11 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்க தொழில்நுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கு இணையாக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்று பட்டு டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை செயற்படுத்தும் முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் பொருளாதார முறைமையின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கடந்த ஆண்டு இலங்கையின் வரி வருமானம் 602 பில்லியன்!
ஓய்வு ஊதியக்காரர்களை உறுதிப்படுத்த கைவிரல் அடையாளம் !
தேர்தல் ஒத்திவைக்கப்படினும் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|
|


