இலங்கை தூதுவரை தாக்கியோருக்கு விளக்கமறியல்!
Wednesday, September 7th, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய ஐந்து பேரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஐந்து பேரும் நேற்று (06)கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்களை இக்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சோலாங்கூர் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றம் 26 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதல் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
புதுக்குடியிருப்பில் ஆண்களை விட பெண்களே அதிகம் - பிரதேச செயலக புள்ளிவிவரம்!
பதவி விலகிய அமைச்சர்களுக்குப் பதிலாக புதிய அமைச்சர்கள்!
பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
|
|
|
இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் – மருத்துவர...
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - புதிய...
ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் அதிரடி நடவடிக்கை! - விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமைச்...


