பிரமிட் திட்டங்களில் தாடர்பில் அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு!
Thursday, August 10th, 2023
பிரமிட் திட்டங்களில் நேரடியாக அல்லது நேரடியற்று ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது
பிரமிட் திட்டங்கள் குறித்து இன்று (10) இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு “ஏமாந்து விடாதீர்! பாடுபட்டு உழைத்த உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.
அதில், இலங்கையில் பிரமிட் திட்டங்கள் சட்ட விரோதமானவை என்றும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்றல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 8 பிரமிட் திட்டங்கள் குறித்து ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொது தேர்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் 15 சதவீதம் குறைப்பு - சுகாதார அமைச்சினால் சு...
தென்னிந்திய இசை கலைஞர்கள் பலர் கலந்துகொள்ளும் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வு யா...
|
|
|


