பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
Tuesday, August 8th, 2023
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை நாடாளுமன்றில் வைத்து அறிவித்துள்ளார்.
நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே- 2 ஆம் திகதியை வர்த்தக விடுமுறையாகப் பிரகடனம் செய்யுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு யாழ் ....
மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராணுவ தளபதி!
பெண்களும் உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளும் தொடர்பில் விஷேட கருத்தரங்கு!
|
|
|


