ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி – மீசாலையில் சம்பவம்!
Saturday, July 22nd, 2023
தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகையகரதத்துடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே உயிரிழப்பு ஏற்பட்டது.
மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் புகையிரத கடவையை அண்டியே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது. சம்பத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈ.பி.டி.பி மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவதூறு சுமத்தப்படுகின்றது!
கனிய வளங்கள் ஏற்றிச்செல்ல பதிவு செய்திருப்பது அவசியம் - புவிச்சரிதவியல் பணியகம் !
ஜூலை முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகள்!
|
|
|


