கௌதம் அதானியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – காற்றலை மின்உற்பத்தி திட்டம் மற்றும் பசுமை ஐதரசன் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!
Friday, July 21st, 2023
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் பெரும் செல்வந்தரான கௌதம் அதானியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி, 500 மெகாவொட் காற்றலை மின்உற்பத்தி திட்டம் மற்றும் பசுமை ஐதரசன் திட்டம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக கௌதம் அதானி, ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலைiயும் சந்தித்து ஜனாதிபதி முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்படும்: வியாபாரிகள் சங்கம் தெரிவிப்பு!
தேசிய லொத்தர் சீட்டுக்கான விலை நிர்ணயம் குறைக்கப்படது 20ரூபா விலை நிர்ணயம் மீண்டும் அறிமுகம்!
சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நி...
|
|
|


