ஜூன் 30 ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!
Monday, June 26th, 2023
ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கள் அறிவித்திருந்தது. இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர்,
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஜூன் 30 ஆம் திகதி வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, அரசாங்கம் மற்றும் நிதியமைச்சு இணைந்து இம்மாதம் 30ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வயதெல்லை நிர்ணயம்!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு எதிர்கட்சியினரும் ஆதரவுளிக்க வேண்டும் - அமைச்சர் நாம...
பொலிஸ் மா அதிபர் விவகாரம் - பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உய...
|
|
|


