மாணவர்கள் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உண்டு – ஒழுக்கம் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடுகின்றது கல்வியமைச்சு !
Thursday, June 15th, 2023
பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடி வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மாகாண அதிகாரிகளுடன் வாரத்திற்கு ஒருமுறை தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக பல தெளிவூட்டல்களை வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் எதிர்காலம் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
வைத்திய பீடங்களில் கல்வி மற்றும் மருத்து பயிற்சி நடவடிக்கை!
ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியில் இதுவரை பிரச்சினை ஏற்படவில்லை - இலங்கை தேயிலை சபை அறிவிப்பு!
தொழுகையின்போது வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு!
|
|
|


