சிலாபம் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, June 6th, 2023

சிலாபம் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

சிலாபம் பிரதேச கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்நிலையில், அண்மையில் சம்மந்தப்பட்ட பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கெண்டிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாகவும் விடயங்களை அவதானித்த நிலையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களம் – நக்டா – நாரா ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிலாபம் பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிகளும் கலந்து கொண்டனர்.

முன்பதாக  பேலியகொட மத்திய மீன் சந்தை வியாபாரிகளுக்கான ஐஸ் கட்டி விநியோகத்தை நியாயமான விலையிலும் சீரான முறையிலும்  மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையைில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், மீன் சந்தை நிர்வாகத்தினர் மற்றும் ஐஸ் கட்டி விநியோகஸ்தர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

000\

Related posts:

ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி...
பொருளாதார ஈட்டல்களுக்கான வாய்ப்புகளை தடுக்க வேண்டாம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்த...
வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு இறுதிக் கட்டத்தில் அமைச்சர் டக்ளஸின் முயற்சி!

கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்...
வனவளப் திணைக்களங்களின் தீர்மானங்களில் மாற்றம் - அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்குப் பலன் - மன்னார் சுவாம...
பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் – தீர்வுகளைக் காண முற்படுமாறு து...