அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை – இராஜினாமா கோரிக்கையை நிராகரித்த அமைச்சர்!
Sunday, June 4th, 2023
ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த நேரத்தில் அரசியல் செய்வது சரியானது அல்ல என கூறியுள்ளார்.
அனைத்திலும் வெளிப்படைத்தன்மை என்பது தேவை என்றும் இந்த விடயத்திலும் தாம் அதனையே கடைபிடிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மீட்பு, மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தருணத்தில் இவ்வாறு அரசியல் செய்யக் கூடாது என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
உறுதியானது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரின் துருக்கி பயணம் !
|
|
|


