மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல சேர்த்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சு அதிபர்களிடம் கோரிக்கை!
Friday, June 2nd, 2023
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல பாடசாலைகளில் தேவையான சித்திகளை அவர்கள் பெற்றிருந்தால் சேர்த்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சு அதிபர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்களின் பெறுபேறுகளின் மறு மதிப்பீட்டுக்காக சிங்கள மொழிமூலத்தில் 20334 மாணவர்களும் தமிழ் மொழிமூலத்தில் 4823 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம், ஏற்கனவே சித்தியடைந்த மாணவர்கள் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும், அந்தத் தடைகளைப் பொருட்படுத்தாமல், மாணவர் சேர்க்கைக்கு தேவையான புள்ளிகளை மறு மதிப்பீட்டில் மாணவர்கள் பெற்றால், அந்த மாணவர்களையும் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளுமாறும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையைக் கடக்கும் விண்வெளி மையம்!
பால் மா விலையை அதிகரிக்குமாறு வேண்டுகோள்!
தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட எதிர்பார...
|
|
|
சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் - காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறு...
இலங்கைக்கான கடன் நிவாரணத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் முக்கிய நாடுகள் - இந்திய நிதி அமைச்சர் நிர்மல...
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்த...


