யாழ் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
Wednesday, May 31st, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயானது கட்டுப்பாட்டில் உள்ளது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்ஆ,கேதீஸ்வரன் தெரிவித்தார்
மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் யாழ் மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டெங்கு நோயின் தாக்கமானது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் குறைந்தளவில் உள்ளது அதேபோல டெங்கு ஒழிப்பு வேலை திட்டமானது மாவட்டம் முழுவதிலும் முன்னெடுக்கப்படுகிறது
குறிப்பாக அண்மைய நாட்களில் டெங்கு நோயினால் இறப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது ராணுவ வீரர் ஒருவர் டெங்கு நோயினால் இறந்துள்ளார் எனினும் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயானது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மீண்டும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட எம்.எஸ்.ஜி. இரசாயனம்!
தேசிய சம்பளம் மற்றும் ஊழியர் எண்ணிக்கை ஆணைக்குழு நியமனம்!
கொழும்பில் பதற்றம் - மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில்!
|
|
|


