பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம் – ஷெஹான் சேமசிங்க!
Thursday, May 25th, 2023
பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான மற்றும் அவசியமான பல பொருட்களுக்கே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேநேரம் குறித்த விவாதத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 4 அல்லது 05 வருடங்களுக்கு நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
000
Related posts:
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்!
மீண்டும் பாடசாலைக்கு சென்ற கையினை இழந்த வைசாலிக்கு பாடசாலை மாணவர்களால் மகத்தான வரவேற்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன - பாதுகாப்பு இராஜாங்க அமைச...
|
|
|


