“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை.- தனித்தனியே நினைவேந்துங்கள் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கோரிக்கை!

Tuesday, May 16th, 2023

போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை. நினைவேந்தல் காலங்களில் விடுதலைப் புலிகளையும் நினைவேந்துவதால்தான் சிக்கல் நிலை ஏற்படுகின்றது. தடைகளும் வருகின்றன.

தமிழ் மக்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவது போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள். அதைவிடுத்து புலிப்பயங்கரவாதிகளை நினைவேந்தும் நிகழ்ச்சி நிரலுக்குள் நீங்களும் பங்கேற்று உங்கள் உறவுகளை நினைவேந்துவதைத் தவறவிடாதீர்கள்” என்றுமு; தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தடுப்பூசியை தனியார் பிரிவினரும் இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் - இலங்கை பொது சுகாதார பரிசோதக...
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - பொதுமக்களிடம் கொரோனா செ...
நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அமைச்சர் டக்ளஸின் கருத்துக்கள் முன்மாதிரியானவை. - அமைச்சர் மனு...

திறைசேரியிருந்து மேலதிக நிதி கோர வேண்டாம் - அமைச்சர்களிடம் நிதியமைச்சர் பசில் கோரிக்கை!
நெருக்கடியான சூழ்நிலைகளில் ஒரே படகில் பயணிக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டியது மிகவும் அவசியம...
ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்றும...