உழைப்பாளர் தினம் நாளை – நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு – 3,500 காவல்துறையினர் கடமையில் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
Sunday, April 30th, 2023
நாளை (1) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில் கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெறும் மே தினப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3,500 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாடசாலை வளாகத்திற்குள் இணைபாடவிதான செயற்பாடுகளுக்கு தடை - கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை – எம்.வீ எக்ஸ் - பிரஸ் பர்ள்” கப்பலினால் சமுத்திர சுற்றாடலுக்கு ஏ...
கட்டுமான பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி - பொதுமக்களிடம் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரி...
|
|
|


