நாட்டின் பல பாகங்களில் நாளை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Monday, April 24th, 2023
வடக்கு, கிழக்கு, வடமேல், மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றையதினம், அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்காரணமாக வேலை செய்யும் இடங்களில் போதுமான அளவு நீர் அருந்துவதும், பொதுமக்கள் முடியுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பதும் சிறந்தது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதியோர்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் தொடர்ந்தும், வீட்டிலேயே இருக்குமாறும், சிறு குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது
Related posts:
மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராணுவ தளபதி!
வன்முறை இடம்பெறக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர்!
அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் - உலக நீர் தின நிகழ்...
|
|
|


