வாகன விபத்துக்களால் இந்த வருடம் 564 பேர் பலி – காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
Monday, April 10th, 2023
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,345 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விபத்துக்களில் 2,446 பேர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற 21 விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டொலர் தட்டுப்பாட்டு நெருக்கடி ஒருபோதும் நிகழாதிருப்பதை மத்திய வங்கி உறுதி செய்யும் – ஆளுநர் அஜித் நி...
நான்கு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் - பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு பயணம்!
நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல - பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவிப்பு!.
|
|
|


