இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கு சீனா உதவியது – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவிப்பு!
Friday, April 7th, 2023
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை அடைய சீனா தனது பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று சீனாவின் புதிய உயர்மட்ட பொருளாதார அதிகாரி லி கியாங்கிடம் ஜோர்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.
மெரிடியன் ஹவுஸ் மற்றும் பொலிட்டிகோ நடத்திய ஒரு நிகழ்வில், உரையாற்றிய ஜோர்ஜீவா, கடன்களை கையாள்வதற்கு சீனா பல நிறுவனங்களைக் கொண்டுள்ளமையால், தாமதங்கள் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சீனா தமது பங்கேற்பை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளதாக ஜோர்ஜீவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அம்பாறையில் பதற்றம்: முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்!
பேருந்துகளில் பயணிகளை அடையாளப்படுத்தும் கருவி!
102 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
|
|
|
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுமந்திரன் MP அடாவடி: வெளிநடப்புச் செய்தார் மாகாணசபை உறுப்பினர்!
குறைந்த விலையில் எரிவாயு இறக்குமதி - தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்த நடவடிக்கைகள் ...
பல நாடுகள் நிதியுதவி வழங்க இணக்கம் - இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மட்டம் அதிகரிக்கும் என ஆய்...


