நுகர்வோர் விவகார அதிகார சபையினர் நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை – பல்வேறு முறைகேடுகள் கண்டறிவு!
Saturday, March 25th, 2023
பண்டிகை காலத்தில் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றமை, விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற துரித இலக்கத்திற்கு அறியப்படுத்த முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் விவகார அதிகார சபையினர் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதான மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், களஞ்சியங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நடமாடும் வர்த்தகர்களையும், மலிவு விற்பனை சந்தைகளையும், சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விசாரணை தொடர்பான தகவல்களை வெளியிடத் தடை!
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு - மக்கள் வெளியேற்றம் – வயற்காணிகள் நிலங்கள் நாசம்!
வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆக...
|
|
|


