விவசாயத்துறைக்கான உதவிகளை 18 மாதங்களுக்கு நீடிக்கின்றது உலக வங்கி – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Sunday, March 19th, 2023
நாட்டின் விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான உதவியை, மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக வங்கி இணங்கியுள்ளது.
அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் பிரதிநிதிகள், அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தபோது, இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதல், 18 மாதங்களுக்கு இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக, 30 மில்லியன் டொலர் நிதியை வழங்க உலக வங்கியின் பிரதிநிதிகள் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Related posts:
1000 ரூபா கொடுப்பனவு நடைமுறை விவகாரம் 5 ஆம் திகதிமுதல் நடைமுறையில் - தொழில் ஆணையாளர்!
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் நபர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு மத்திய வங...
யாழ் ஒருங்கிணைப்புக் குழு துரித நடவடிக்கை - வழமைக்கு திரும்பியது காரைநகர் - ஊர்காவற்துறை போக்குவரத்...
|
|
|


