ஒரு பில்லியன் டொலர் இந்தியக் கடன் வசதியை நீடிக்க பேச்சுவார்த்தை – ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவிப்பு!
Wednesday, March 8th, 2023
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கைக்கான உறுதிப்பாடு எட்டப்படுகின்ற நிலையில், ஒரு பில்லியன் டொலர் இந்தியக் கடன் வசதியை நீடிப்பதற்காக, இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
தற்போதைய கடன் வசதி, மார்ச் 17 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையிலேயே புதிய கடன் வசதிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இதுவரையில், இந்திய கடன் வசதியில் இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்தே ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை சில மாதங்களுக்கு நீடிக்க இலங்கை இந்தியாவுடன், இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பங்கு சந்தையின் நம்பிக்கையில் பெரும் வீழ்ச்சி!
பகிடிவதை விவகாரம்: பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு யாராவது செய்திருக்கலாம் - யாழ். பல்கல...
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|


