தேர்தல் ஒத்திவைப்பிற்கு எதிராக நாடாளுமன்றில் இரண்டு நாள் விவாதம்!
Thursday, March 2nd, 2023
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டு நாள் விவாதத்தினை கோரியிருந்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் நாட்டில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், இது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இந்திய பெருங்கடலின் வெப்பம் வேகமாக அதிகரிப்பு!
புகையிலை உற்பத்தியை தடை யாழ். விவசாயிகள் மீது மேற்கொள்ளப்படும் சதி! ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தி...
4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் அல்ல : அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்!
|
|
|


