நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நடைமுறை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Thursday, March 2nd, 2023
எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தேசிய மின் உற்பத்திக்கு 2300 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிசக்தி எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரச நிறுவனங்களால் அனுமதிக்கப்படும் திட்டங்களை விரைவுபடுத்தவும், அங்கீகாரம் பெற முடியாத திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக உரிமங்களை இரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைப்பு!
நேர்மறையான மாற்றத்திற்கு ஊடகவியலாளர்கள் தயாராக வேண்டும் – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அழைப்பு!
நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு - இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீ...
|
|
|


