சுயாதீன ஆணைக்குழு தொடர்பான புதிய அறிவிப்பு !
Monday, February 27th, 2023
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவற்றின் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான ஆரம்ப கட்ட விவாதம் இந்த வாரம் நடைபெற உள்ளது.
இதுவரை பெறப்பட்ட 1,600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து முதற்கட்ட தகுதிப் பட்டியலை தயாரித்து ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மூன்று தினங்களுக்குள் தபால்மூல வாக்குச்சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் - அஞ்சல் திணைக்கள ஆணையாளர் த...
இன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!
நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு துறைசார் அதிகாரிகளுக்க...
|
|
|


