3 மாதங்களின் பின்னர் QR முறைமை நீக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, February 21st, 2023

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர், நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற சலகுன அரசியல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்

இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது

Related posts:

மே 11 ஆம் திகதியுடன் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்குமென்று நான் ஒருபோதும் கூறவில்லை - சுகாதார பணிப்பாளர...
வறுமையால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலையில் பெற்றோர் – வெளியானது அதிர்ச்சி கணிப்பு!
அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமையட்டும் – ...