தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ஆயிரத்து 201 கோடி – அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!
Monday, February 20th, 2023
மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி இழப்பீடாக, பதினாறாயிரத்து 982 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இடம்பெற்ற 49-வது ஜிஎஸ்டி சபை கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மத்திய அரசின் சொந்த நிதி ஆதாரத்திலிருது மாநிலங்களுக்கான நிலுவையில் உள்ள மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு தொகையும் வழங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு ஜூன் மாத ஜிஎஸ்டி இழப்பீடாக ஆயிரத்து 201 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Related posts:
இலண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளம் வெளியானது!
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட புயலால் பல மில்லியன்கள் இழப்பு!
வெற்றிகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது - அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் ச...
|
|
|


