ஜனவரிமுதல் இதுவரையில் ஒரு இலட்சத்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை !
Saturday, February 18th, 2023
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 230 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை, அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு நாளாந்தம் சுமார் 3,906 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு 54,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை 2022ஆம்ஆண்டு 47,282 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி - பரிந்துரைகள் இந்த வாரத்தில் கிடைக்கும் என நம்ப...
யாழ்ப்பாணத்துடனான சேவையை விஸ்தரிக்க ஆர்வம் காட்டும் சர்வதேச விமான நிலையங்கள்!
|
|
|
நெருக்கடிக்கு முறையான தீர்வுகளை வகுக்க பொதுமக்களின் கருத்துக்களை நாடும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க...
வெளிநாட்டு சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 40 பேர் ஜூலையில் உள்ளீர்க்கப்படுவர் - வெளிவிவகார அமைச...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி இலங்கை வருகை - நிதி அமைச்சு தகவல்!


