தேர்தலுக்கு தேவையான பணம் தராவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!
Wednesday, February 8th, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய பதில் வழங்கப்படாவிடின் உயர் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அரசாங்க அச்சகத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் போன்றவற்றினால் வாக்களிக்கப் பங்களிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு முற்பணத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், அந்தக் கோரிக்கைகளுக்கு அமைவாக திறைசேரி செயலாளரிடம் அடிப்படைத் தொகையாக 770 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய 13 வெளிநாட்டவர்கள் கைது!
பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி - பதில் பணிப்பாளர் அறிவ...
|
|
|


