ஒலுவில் துறைமுகத்தில் ரின்மீன் தொழிற்சாலை ஒப்பந்தம் கைச்சாத்து!

Tuesday, February 7th, 2023

உள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டது.

அம்பாறை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள ரின்மீன் உற்பத்தித் தொழிற்சாலையை தனியார் முதலீட்டாளர் ஊடாக புனரமைத்து மீண்டும் இயங்கச் செய்து உற்பத்தியை அதிகரிக்கவும், இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவும் எடுக்கப்பட்ட தொடர் முயற்சியின் பெறுபேறாக இன்றைய தினம் (07.02.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்னிலையில் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தனியார் கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே குறித்த ஒப்பந்தம் அமைச்சில் கைச்சாத்தானமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கின் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் வடக்கின் இளைஞர் யுவதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. ...
அமைச்சர் டக்ளஸின் ஆரோக்கியமான கோரிக்கைகளினால் காத்திரமான தீர்மானங்கள் -யாழ். மாவட்ட செயலகத்தில் சம்ப...
மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்த தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்!

எம்மீது சுமத்தப்பட்டுவந்த பழிகளுக்கு பதில்களை காலத்திடம் ஒப்படைத்தோம். காலம் எம்மை ஏமாற்றிவிடவில்லை ...
பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடருவதற்கு நீங்கள்தான் காரணம்: மக்கள் மீது குற்றச்சாட்டினார் அமைச்சர் ...
அன்பும் அறமும் எங்கும் நிலவட்டும்! புதிய யுகம் நோக்கி புத்தாண்டு மலரட்டும்!! - வாழ்த்துச் செய்தியில்...