விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!
Thursday, February 2nd, 2023
விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு கடந்த 27ஆம் திகதி நள்ளிரவு நிறைவடைந்தது.
புதிய அமர்வு எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என இது தொடர்பான விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இராஜாங்க அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வமாக அதிகாரங்கள்!
அதிகரித்துச் செல்கிறது காச நோயாளர்களின் எண்ணிக்கை – இலங்கை மக்களை எச்சரிக்கிறது காசநோய் மற்றும் சுவா...
கியூ.ஆர் முறைமை தொடரும் - மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை - துறைசா...
|
|
|


